Sunday, August 15, 2010

தங்கை மண நாள் அன்று என் நிலை

பூ மாலை சூடிய மங்கை உன் கழுத்தில் ஒரு மாற்றம்
அது புதிதாய் குடியேரிய தாலிக்கயிறு
தாலிக்கயிரில் தங்கம் ஜொலிக்கத் தொடங்கும் நேரம்
என் இன்பத்தின் எல்லை இமயத்தின் உச்சி வரை என்பேன்.

ஊரார் வாழ்த்தி அனுப்ப.......................
மன்னவன் கை பிடித்து மங்கை "நீ"
அவர் மனை நோக்கி செல்ல.............
என் இதயத்தின் இன்னல்களை இருக்கி வைப்பேன்
புதிதாய் நதி ஒன்று பிறக்காமல் இருக்க கண்களை பூட்டி வைப்பேன்.

இத்-தருணத்திற்க்காக உழைத்து களைத்த, ன்றேடுத்த அன்னையின் அருகே
அவள் பிடித்து நின்று இளைப்பாற இரும்புத் தூனாய் மாறி நிற்ப்பேன்.

மணம் முடித்த உறவினர் அவர் இல்லம் நோக்கிச் செல்ல
என் இல்லம் இருளில் மூழ்கி கிடக்குமோ என் செல்லமே.............

4 comments:

rsankarpollachi said...

அருமை நண்பா ... அருமை அருமை !!!
நான் சொல்ல நினைத்ததெல்லாம் நீ கவிதையாய் வடித்து விட்டாய் ....
மகிழ்ச்சி எனும் கங்கை பெருக்கெடுத்து ஓடட்டும் :)

கங்கையில் பாய்ந்தோடும் நீர் நம்மை மட்டுமல்ல மகிழ்விக்கிறது
காடு மேடு முள் என எத்தனையோ இன்னல்களை தாங்கி
தன் பாதையில் உள்ள அனைவரையும் மகிழ்விக்கிறது

கங்கையின் பெருமை அது ஆராய் பாய்ந்து அனைவரையும் மகிழ்விப்பதில்
மங்கையின் பெருமை செல்லும் வீட்டில் அன்பையும்.. ஆனந்ததையும்.. ஆர்பரிக்க செய்வதில்

note : Courtesy kguru - " அன்பையும்.. ஆனந்ததையும்.. ஆர்பரிக்க செய்வதில் "

அன்புடன்
சங்கர்

கார்த்தீ said...

சுரேசு......

மணம் முடிப்பதோ...... உங்கள் தங்கை.....
பெருக்கேடுப்பதோ உங்கள் கண்களில் கங்கை......

உங்கள் கவிதையை படித்து...

அண்ணன்களின் நெஞ்சமெல்லாம்...பாரம்....
கசிந்தது என்னவோ கண்களின் ஓரம்....
தொட்டு பார்த்தேன்....சிறிதாய்.... ஈரம்......

இருளில் மூழ்காது உங்கள் இல்லம் தங்கையால்.....
விரைவில்...ஒழி ஏற்றப்படும் இன்னொரு மங்கையால்....

சிறப்பாய் அமையட்டும் தங்கையின் மண வாழ்க்கை....
அதற்கு எப்போதும் உண்டு அண்ணன்களின் வாழ்த்துக்கள்....

அண்ணன்...
அ.கார்த்திகேயன்..

கார்த்தீ said...

ஆஹா சங்கு......
உங்கள் உதாரணம் மிக அருமை......
( காதல் நோயால் தாறு மாறாக தாக்க பட்ட சங்கு... பாசம் பற்றி சொன்னது அருமை....)

இதோ இன்னொரு உவமை.....

எங்கோ ஊற்றெடுக்கும் கங்கை.... உருவான இடத்தை விட்டு....
பாயும் இடங்களில் எல்லாம் செழுமை சேர்க்கும்.....
மங்கையும் அது போல தான்...... பிறந்த இடத்தை விட்டு
செல்லும் இடத்தில் செழுமை சேர்ப்பது கடமை...
அதுவே பிறந்த இடத்திற்கு பெருமை....

தங்கையை பிரிவதால் வரும் துன்பம்...... இன்னொரு
மங்கையை அழைத்து வருவதால் மாறி போவது இன்பம்....

விட்டு செல்வது என்னவோ..... பாச மலர்....... உங்களை
என்றும் விடாமல் இருக்க போகுது ஒரு நேச மலர்...

இந்த வரிகள் எல்லாம்....
ஒரு புறம் பிரிய போகும் தங்கையையும்.....
மறு புறம் வர போகும் மங்கையையும்......
நினைத்து உருகும்......பாசம் கொண்ட அனைத்து அண்ணன்களுக்கும் சமர்ப்பணம்...

சுரேஷ் குமார் மு said...

கண்ணுகலா... ஒன்னும் சொல்லரதுக்கு இல்லை....