Monday, October 4, 2010

நானும் நடை பழகி

நானும் நடைபழகி நாட்கள் பல ஆயிற்று,
நாளைய வாழ்விற்கான ஓட்டம் ஓயவில்லை இன்னும்...
என் அனுபவத்தின் வயதில் ஓராண்டு கூட......
கடந்து வந்த பாதையை என்னிப் பார்க்கிறேன் இன்று..
அருமை என தோன்றிற்று... கடவுளுக்கும்
காலத்திற்க்கும் நன்றி கூறி -பயணத்தை தொடர்கிறேன்
பல தூரம் போக வேண்டும் இன்னும்.....

Sunday, August 15, 2010

தங்கை மண நாள் அன்று என் நிலை

பூ மாலை சூடிய மங்கை உன் கழுத்தில் ஒரு மாற்றம்
அது புதிதாய் குடியேரிய தாலிக்கயிறு
தாலிக்கயிரில் தங்கம் ஜொலிக்கத் தொடங்கும் நேரம்
என் இன்பத்தின் எல்லை இமயத்தின் உச்சி வரை என்பேன்.

ஊரார் வாழ்த்தி அனுப்ப.......................
மன்னவன் கை பிடித்து மங்கை "நீ"
அவர் மனை நோக்கி செல்ல.............
என் இதயத்தின் இன்னல்களை இருக்கி வைப்பேன்
புதிதாய் நதி ஒன்று பிறக்காமல் இருக்க கண்களை பூட்டி வைப்பேன்.

இத்-தருணத்திற்க்காக உழைத்து களைத்த, ன்றேடுத்த அன்னையின் அருகே
அவள் பிடித்து நின்று இளைப்பாற இரும்புத் தூனாய் மாறி நிற்ப்பேன்.

மணம் முடித்த உறவினர் அவர் இல்லம் நோக்கிச் செல்ல
என் இல்லம் இருளில் மூழ்கி கிடக்குமோ என் செல்லமே.............

Saturday, August 14, 2010

எட்ட இருந்த சொந்தம் ஒன்னு

ஓய்யாரமா ஓடி விளையாண்-ட
ஒழுக்கமா படிச்சு வேலைக்கு போ-ன
நாளும் ஓடிப் போச்சு............
...நான் பொறந்த வம்சத்த பத்தி விசாரிச்சப்ப
எட்ட இருந்த சொந்தம் ஒன்ன தொட்டுப் பாத்தன் இன்னைக்கு
மனசு எல்லாம் நெறஞ்சு போச்சு.........
தொட்டு பாத்த சொந்தம் தொடர்வத நெனச்சு........

Wednesday, August 11, 2010

தங்கைக்கு ஒர் வாழ்த்து

உன் இன்பத்தின் எல்லை இன்னும் கொஞ்சம் நீளட்டும்
என் அன்புத் தங்கை இன்னும் கொஞ்சம் சிரிக்கட்டும்
இந்த பிறந்த நாள் மகிழ்ச்சியை - அவள்
மடியிலேயே விட்டு விலகிச் செல்லட்டும்..!

Monday, July 5, 2010

என் நினைவில் மறையுமோ

என்நினைவில் மறையுமோ - இல்லை
மறக்க நினைக்குமோ என்நெஞ்சம் - இல்லை
வழியில் போகுமோ?? என்விழி முன்
எனக்கு நடந்த வஞ்சம் - வயோதிகம்
ஆனாலும் வாழ்ந்து கொண்டல்லவா
இருக்கும் என் மனதில்............

Monday, April 26, 2010

நினைவின் நிஜம்

காலையில் நான் கண்விழிக்கும் முன்
என் கன்னத்தில் முத்த மிடுகிறாய்..!
கதிரவன் கண் முடும் நேரம்
என் காதருகே முனு முனுக்கிறாய்..!
கதவருகே காவலாளியாய் நிலவிருக்க
நீ இன்னும் என் நினைவில் மிதக்கிறாய்..!