உன் புறழகு வேண்டாமடி - அது
காலத்தில் மாய்ந்து போகுமடி
உன் அகழகு வேண்டுமடி - அதுவே
ஆயுள் வரை நீடிக்குமடி
உன் கார்கூந்தல் நீளமென்னை -என்ன செய்யும்
களைத்து நான்வரும் போது - அழைத்து
அரவணைக்கும் அன்பு உள்ளம் - அல்லவா
என்னையுருக வைக்கும்
பள்ளி படிப்பறிவு கொஞ்சம் போதும்
ஆழகலங் கொண்ட அனுபவறிவு
அதிகம் வேண்டும்
மதியற்று நான் நடந்தால் - உன்
மதிகொண்டு என்மதி வெல்லவேண்டும்
இறையடி நான்சேர நேர்ந்தால் - என்
இராஜ்ஜியமாள ராணியின் திறன்வேண்டும்
மாடகுளம் என்வழி தளைக்க
மங்கையொருத்தி வேண்டும்
மங்கை "நீ" ஒருத்தி மட்டுமே வேண்டும்............
Tuesday, December 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment