அதிகாலை உன் அன்புக்குரலில் என் உறக்கம் களைப்பாய்,
போர்வையை நான் விலக்க என் காலின் அருகே கண் முடி உறக்கம் கொள்வாய்,
மாலை நேரம் நான் பள்ளி முடிந்து வீடு திரும்பு வேன்
நீ, வானத்தை நோக்கி கை இரண்டை உயர தூக்கி,
கால் இரண்டை சுவரில் சாய்த்து, ஓர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாய்
உன் உறக்கம் கலைப்பேன் , என்னுடன் சிணுங்கிச் சீராடி செல்வாய்;
சற்று நேரத்தில் என் மடியில் புரண்டு மகிழ்வாய்,
அது பகல் பொழுதுக்கு மாலை மறையும் தருணம், இரவுக்கு அது அதிகாலை பொழுது ;
அடுத்த வீட்டு திண்ணையில் தோழிகளுடன் அம்மாவின் அரட்டை துவங்கும்,
நீ,
பாது காவலன் போல் அருகே அமர்ந்திருப்பாய் ஆரவாரமின்றி,
வீடு வரை அம்மாவை வழி அனுப்பி வைத்து விட்டு, வேட்டைக்கு செல்வாய்.
ஓர் நாள் உன் அன்புக் குரல் கேட்கவில்லை; என் உறக்கம் களைய வில்லை,
என் உயிர் மட்டும் உணர்ந்திருந்தது,
"உன் உயிர் நேற்றே பிரிந்து விட்டது;
மகிழ்ச்சி தனது ஒரு வார விடுமுறை விண்ணப்பத்தை என்னிடம் விட்டு சென்றது"
என்று!!
Sunday, April 5, 2009
என்னை விட்டு பிரிந்து செல்கிறாய்.....
சூரியனையும் சந்திரனையும் ஒருங்கினைத்து
ஓர் புதிய உறவை வளர்க்க பார்கிறேன் - நீ
வானத்தையும் கார் மேகத்தையும் பிரிக்க -என்னிடம்
ஆலோசனை கேற்கிறாய்
இந்த காதலை வளர்த்து - ஓர்
காவியம் படைக்கலாம் என்கிறேன்
இந்த காதல் கலைந்தால் - பெரும்
காவியம் ஆகும் என்கிறாய்
கண்களுக்கு நீந்த தெரியாதே - என்
கண்களை கழங்க விடதே
கண்ணீரில் மூழ்கி மாய்ந்து விடும் என்கிறேன்
மவுனத்தை நிலவ விடுகிராய்,
உன் மனக் குமுறலை மறைக்கிராய்,
என்னை விட்டு விலகி நடக்கிறாய் .................
உன் நினைவுடனும், என் நிழலுடனும் - என்னை
இன்னும் என்னடி பேசச் சொல்கிறாய்...?
ஓர் புதிய உறவை வளர்க்க பார்கிறேன் - நீ
வானத்தையும் கார் மேகத்தையும் பிரிக்க -என்னிடம்
ஆலோசனை கேற்கிறாய்
இந்த காதலை வளர்த்து - ஓர்
காவியம் படைக்கலாம் என்கிறேன்
இந்த காதல் கலைந்தால் - பெரும்
காவியம் ஆகும் என்கிறாய்
கண்களுக்கு நீந்த தெரியாதே - என்
கண்களை கழங்க விடதே
கண்ணீரில் மூழ்கி மாய்ந்து விடும் என்கிறேன்
மவுனத்தை நிலவ விடுகிராய்,
உன் மனக் குமுறலை மறைக்கிராய்,
என்னை விட்டு விலகி நடக்கிறாய் .................
உன் நினைவுடனும், என் நிழலுடனும் - என்னை
இன்னும் என்னடி பேசச் சொல்கிறாய்...?
Saturday, January 3, 2009
படித்ததில் பிடித்தது
இறைவனோ உலகத்தின் படைப்பாளி
இறைவனோ உலகத்தின் படைப்பாளி
உழைப்பவனோ உலகத்தின் படைப்பாளி
முதலிட்டு உழைப்பவனோ முதலாளி
வியர்வை சிந்தி உழைப்பவனோ தொழிலாளி
நாட்டுக்காய் உழைப்பவனோ போராளி
கல்வியில் உயர்பவனோ அறிவாளி
உழைக்காமல் உறங்குபவன் கடனாளி
உறக்கத்தில் வாழ்பவனோ நோயாளி
சுயசிந்தனை அற்றவனோ ஏமாளி
சிந்திக்க தெரியாதவன் கோமாளி
உழைத்து வாழ்பவனோ பலசாலி
உழைப்பாளி உலகத்தின் படைப்பாளி
படைப்பாளி உலகத்தின் உழைப்பாளி
இறைவனோ உலகத்தின் படைப்பாளி
உழைப்பவனோ உலகத்தின் படைப்பாளி
முதலிட்டு உழைப்பவனோ முதலாளி
வியர்வை சிந்தி உழைப்பவனோ தொழிலாளி
நாட்டுக்காய் உழைப்பவனோ போராளி
கல்வியில் உயர்பவனோ அறிவாளி
உழைக்காமல் உறங்குபவன் கடனாளி
உறக்கத்தில் வாழ்பவனோ நோயாளி
சுயசிந்தனை அற்றவனோ ஏமாளி
சிந்திக்க தெரியாதவன் கோமாளி
உழைத்து வாழ்பவனோ பலசாலி
உழைப்பாளி உலகத்தின் படைப்பாளி
படைப்பாளி உலகத்தின் உழைப்பாளி
Subscribe to:
Posts (Atom)