Saturday, October 4, 2008

நண்பனுக்கு ஓர் வாழ்த்து

ஹையோ வினொத்து, உனக்கு வயசாய்ப் போச்சே!!

பரவாயில்லை,

வயசுக்கு வயசாகட்டும், சிந்தனையும் செயலும் வாலிப பருவத்திலேயே இருக்கட்டும்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!

வங்க கடல் ஓரத்திலே (மேரினா ஃபீச்) வந்து கூடி, ஒன்று சேர எங்களுக்குச் சம்மதம்,
வைத்திருக்கும் சன்ட்ரோவிலே, மீன்கொதி பறவையை அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை வாங்கி வர உனக்கு சம்மதமா???

நண்பனின் பதில்
முதலில் இங்கே வா...

மீன்கொதி பறவையை அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை வாங்கி வர எனக்கு சம்மதமே !!!!

புரிந்து போன புதிர், மீண்டும், புரியாமல் போகுதடி!

நீ, உன் முகம் காட்ட, வான் நிலவு தன் முகம் மறைத்த தடி;
நீ, மௌனம் கலைக்க, வானுலாவும் பறவை இனம், மௌனம் ஆனதடி;
ஒலி ஒளி உலகத்தை விட்டு போனதடி.

நான், புரியாமல் தவிக்கிறேன் ;
நீ, புன்னகையில் மிதக்கிறாய்!

பூங்-காற்று என் காதில்,
"நிலவின் களங்கம், இவள் முகத்தில் இல்லை
பறவையின் மொழிப் பிழை, இவள் மொழியில் இல்லை"
என்று சொல்லி போனதடி;
புரியாத புதிரை பூங்காற்று புரியவைத்ததடி.

உலகத்தை காக்க, உன்னை கைதியாக்கி,
என் உள்ளம் என்னும் சிறையில் அடைத்து வைத்தேன்;

மீண்டும்,
நிலவு வானுலாவ வந்தது,
பறவை இனம், பாடத் துவங்கியது;
ஒலி ஒளி உலகத்தை வந்தடைந்தது.

நான்,
"நீ, சினங்கொள்ளாமல் இருக்க;
சிறையெடுத்த காரணத்தை எடுத்துரைக்க" வந்தேன்,

நீ,
புதியதொரு கோணத்தில் புன்னகைத்து நிற்கிறாய் !!

இந்த சிறை உனக்கு பிடித்துப் போனதோ - இதுவினா
விடை தேடமுயல்ந்தேன், பிறகறிந்தேன்
பூவையரின் புன்னகைக் கோரகராதி;
இந்த பூவுலகில் இல்லையடி,
இதுவரை, பூங்காற்று பதில் ஏதும் சொல்லவில்லையடி;
புரிந்து போன புதிறொன்று, மீண்டும், புரியாமல் போனதடி!!

Friday, September 19, 2008

என்னுள் வந்து விழுந்தவை

சாதித்து விட்டு சாகப் பிறந்தவன் நான்,
சாதிக்கும் முன் சாகப் பிறக்கவில்லை;

சரித்திரத்தின் ஏடுகள் என் முகவரிக்காக காத்துக் கிடக்கின்றன,
தன்னம்பிக்கை எனக்கு உறுதுணையக இருக்கும்,
தளராத முயற்சி என்னை வழி நடத்தி செல்லும்,
சற்றும் சலனமில்லாமால் என் வழியில் நான்....

மீண்டும் எழுந்து நடப்பேன், 

நடந்து கொண்டே இருப்பேன்
லட்சியத்தை தாண்டி பலநுறு 
அடிகள் நடந்த பின்
ஓய்வு எடுக்கலாமா? என யோசிப்பேன்!

வாழ்கையின் ரகசியம்

வாழ்கையின் ரகசியம் வானத்தில் எழுதியிருந்தால்,
வாசித்து வாழ்ந்திருபேன்,
வானத்தில் எழுதவில்லை!

ஒரு நாள்,
கார்மேகம் கண்ணை கசக்க,

வானவில் வந்து போக,
என் வீட்டின் முன் சிறிதொரு குளம் ஒன்று தோன்ற,

மழை துளிகள், மழை நீரில்;
நீராடி மகிழ்வதை நான் ரசித்துக் கொண்டிருக்க,

என் பார்வையின் எல்லையில்,
பருவமங்கை "நீ" வந்து நிற்கிறாய்!

நீ வந்ததேனோ வந்ததேனோ,
வினாவும் வியப்புமென்னை சூழ...


அர்த்தம் புரிந்ததடி, விசயம் விளங்கியதடி,
வாழ்க்கையின் ரகசியத்தை உன்னுள் புதைத்து,
காமன் வடிவமைக்க,
பிரம்மன் உயிர் கொடுக்க,
வர்ணண் உன்னை, என்னிடம் வழியனுப்பி வைத்தான் என்று!!