Sunday, January 4, 2015

திகழினி

​​ஐய வருடம், ஐப்பசி 8 ​அதிகாலை,
என்தூக்கம் களைய எதிரே நின்றாள்.

மாமா,
இன்பந் தருதுன்ப இன்னல்
தெடங்கிற் றென்ராள்!!


என்னுள் ளெழுந்த பூகம்பம்
என்னை​ ​​அ​சைக்க வில்லை
உதட்டை அசைத்தது "குளித்து வா போலா மென்றது"

90 கிலோ மீட்டர் தூரமில்லை,
தரை தொடங்கி மூன்றாம்
தளமே தூரமானது.

​​(சூழ்)நிலை விளக்கிய மருத்துவர்
என் நிலை குலைத்தார்
என்னுள் பூகம்பம்
புத்துயிர் பெற்றது
என்னை அசைத்தது..!
என்னைம் புலனடகியது
என்னிலை உலகறிய வைத்தது.

வெள்ளை உடையனிந்த தமிழ(செவிலி)ச்சி
வேகமாய் எடுத்துரைத்தாள் (நிபந்தனைகளை)
பாவம்,
என்னைம் புலனும் அடங்கிய
விவரம் அவளறிய வில்லை போழும்?
நான்,
​தாளில்​ கிருக்கி முடிக்க
எடுத்து விரைந்தாள்.

​என் எண்ணம் போல் நடந்தவலே,
​​அந்த அன்னம் போல் பறந்தவலே,
​உருண்டோடும் வண்டியிலே
ஓசையின்றி கிடந்தவலே,
உருண்டோடிய வண்டி (அறுவை சிகிச்சை)அறையினுள் மறைய
என்னுள்ளம் பட்டபாடு உலகறியுமோ?

​(அறுவை சிகிச்சை​ அறை முன்)​​
ஆயிரம்பேர் சூழ்திருக்க அனாதைபோல் அமர்ந்தேன்,
அறையின் கதவு இமை​த்தே இயங்கியது​,
என்​விழி​ மட்டும் இமைக்​காமல்​ இயங்கியது.

அங்கு,
அந்த உடைபூண்டதனால்
அவன் காவலாளி - நா​னே
உண்மையான காவலாளி.

ஆறடிமனிதர் அஷ்வத்தா மவர் (குழந்தை மருத்துவர்)
சுருக்கி முடித்தார் -நான்
விரித்துள் வாங்கி வெளிபடுமுன்
காற்றில் கரைந்தார் -அவரை
கடமை அழைத்தது போழும்!

ஒய்யார நடைய பயின்ற செவிலிச்சி
என்னை ஓட வைத்தாள்.
ஆழ்துறக திலிருக்கும்
என்மகளை ஏந்திநின்றாள்.


மீண்டும் ஒரு முறை,
என் இமையின் ஓரம்ஈரம்​ - காரணம்,
வந்த​ ஆ​னந்தத்தை வாங்கிவைக்க 
மனதின் கொள்ளளவு போதவில்லை.

பரிசோதனை உண்டென்று பாசாங்குறைத்தாள் - தன்
ஒய்யார நடை தொடர்ந்தாள்,
அது கல் மண்ணாகும் வேகம்
எனக்கோ அது ஒளியின் ஓட்டம்.

ஆயிரம்பேர் சூழ்திருக்கும் அரண்மனை
என்று உணர்ந்தேன்,
ஓர் அரசன்போல் அமர்ந்தேன்!

எனக்காக பூத்தவள் இங்கிருக்க (மனைவி)
என்னால் பூத்தவள் அங்கிருக்க (மகள்)
என்னுடன் பூத்தவள் காத்துநிற்க (தங்கை)
இன்பமா துன்பமா தேரியவில்லை
அத்தருணம் துய்தேன்!

ரேனுகாதேவி...(மகப்பேரு மருத்துவர்)
அவரை பெற்றவர் சுவாசிக்க தத்தலிக்க..
எனக்கான சுவாசத்தை நின்றுகாத்தவர்..
அவர்,
நீடுடிவாழ என்றும் இறைவனிடம் முறையிடுவேன்.

தாய் நலமென்றார்
மகிழ்ந்தேன்!

சேய்யழுதள் என்றார்
அழுகையை நிறுத்த யாருமுற்ப வில்லையா?
மூடர் அனைவரும் வேடிக்கை பார்த்தனரா? என
பாசம் கொண்டதினால் கோவங்கொண்டேன்.
அறிவிய லறிந்தனால் அமைதியானேன்.

நிர்மலா வர மூன்றுமணி நேரம் ஆகும்.
அறைக்கு செல்லுங்கள் என்றார்..
அவரும் தாயல்லவா,
என் புறங்கொண்டகம் அறிந்தார் போழும்!

(எங்கள் அறையில்)
அவள் பெற்றவள் கீழிருக்க - நான்
பெற்றவளை உயர ஏந்திநின்றாள்
தாலாடியே உறங்கவைத்தாள்
தங்கையின் அருமை கொண்டவனே அறிவான்!!

உயிரற்ற வண்டியிலே,
உயிர்பெற்று வந்தாள்,
மகளை ஒப்பிட்டு வினாவினாள்
யாரை போல் உள்ளாள்,
எனைப் போலா? உங்களை போலா?
இந்த நிறம் தங்குமா தங்காதா?

நான்,
விடை காணமுற்பட வில்லை
என் மகள்,
விளகத்திற் குறியவளாக இருக்க
ஆசை கொண்டேன்!

ஆதாலால்,
திகழினி என்றே பெயர் சூட்டினேன்....!!

திகழினி...,
நீ திகழ் இனி..!!




5 comments:

Sathish Subramani said...

தோழரே, திகழினி அருமையான பெயர். பெயரின் பொருள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன். தெரியப்படுத்த முடியுமா என் மின்னஞ்சல் முகவரிக்கு... sathish.s1@gmail.com

Unknown said...

Please tell me. What is the meaning of திகழினி

Unknown said...

My daughter name thigazhini. ... Name meaning manka arivoli paraithaval

Guna ranjan said...

உடுமலைப்பேட்டை சுரேஷ் அவர்களுக்கு நீங்கள் எழுதி இருக்கும் செய்தி.. ஒரு மகத்தான இலக்கியம்.. எண்ணத்தின் ஒளி கணவனின் தந்தையின் அண்ணனின் பாசமிகு அன்பு நிறைந்த அடிச்சுவடு பெண் குழந்தை பிறந்தால் கோபம் கொள்ளும் ஆண்மையற்ற ஒருவனின்.. நெஞ்சில் ஏற்றும் அம்பு தமிழினியின் தகப்பனுக்கு பிரகாசமான ஒளிமயமான வாழ்த்துக்கள் திருவையாறு குணா ரஞ்சன் 9698630007

சுரேஷ் குமார் மு said...

நன்றி குணா...