Thursday, December 22, 2011

சின்னஞ்சிறு வயதுமுதல்

சின்னஞ்சிறு வயதுமுதல் எனக்கு
கிடைத்த பொக்கிசமட அவள்;

வீடேன்னும் விளையாடரங்கில் வீரனாக நானிருப்பேன் - என்
தாயின் மடியில் பார்வையாளராக அவளிருப்பாள்

காலம் மெல்ல நடைபோட - அவள்
எழுந்து நடக்கும் காலம் வந்தது - கூடி
விளையாட கூட்டுகாரியானள்

அந்த சின்னஞ்ச் சிறுவயதில் ஆயிரத்திற்க்கும்
மேலான முரண்பாடுகள்; அதென்ன சண்டையா?
இல்லை,
கூடி விளையாண்டதில் எழுந்த குழப்பமா?
தீர்வுகாண அம்மா நீதிபதியாவாள் - வீடு
நீதிமன்றம் ஆகும்
தண்டனைக்கு பயந்துதிருவரும் தப்பி ஓடுவோம்
ஓட்டத்தின் களைப்பு மெல்லென்னை
நீங்கிச்செல்ல - நீதிமன்றம் வீடாகும்;
நீதிபதி அம்மா ஆவாள்
வெற்றி நடை போட்டு - வீடு
திரும்புவேன்; என்னுடன் அவளுமிருப்பால்

பருவகாலம் மாறிச்செல்ல - அவள்
பள்ளி செல்லும் காலமும் வந்தது
அவளின் பாதுகாவலன் ஆனேன்

கல்லுரிக்கு நான் செல்ல - அவள்
கனவுகளுடன் பயணித்தேன்

வாழ்க்கையின் அடுத்த பகுதி,
வேலைக்கு போக நேரம் ஆச்சே
விடைபெற்று நான் செல்ல - அவள்
தன் மனதின் அழுகையை
முகத்தில் மறைத்தாள்.

ஆகயத்தில் நான் பறக்க
வெற்றி படிகளில் நான்னேற
உலமார மகிழ்ந்தாள்;

காலம் ஓயவில்லை
நானல்லவா ஓய்ந்து விட்டேன்

பொன்னும் பொருளும் சேத்தாச்சு போதுமட சாமி - இனி
ஓய்வெடுக்க நேரமாச்சு;
பறந்து வந்தாச்சு பிறந்த மண்ணிற்கே - அங்கே
சரிந்து கிடக்கும் நாற்காலியில் சாய்ந்திருந்து - என்
சரித்திரத்தை என்னிப் பார்ப்பேன்
சரி எனத்தோன்றுமோ
தவறு எனத்தோன்றுமோ
தெரியவில்லை!

காலம் தன் பயணத்தை தொடர
அந்த சாயங்கால வேளையிலே..
சரித்திரத்தை என்னி பார்க்கையிலே..
சத்தமின்றி என் பயணம் முடியட்டும்!!

ஐயோ, மாரிலடித் தழுவாலே
தள்ளாத வயதில் என்தங்கை - அன்று
அவள் மனதின் அழுகை முகத்தில்
தெரியும்;
காற்றுடன் பயணி தவள் கண்ணீர்
என்னை வந்தடையும்; அது
நான் கொண்ட பாசத்தின்
நன்றி பரிசென்பேன்

அந்த பரிசைக் கொண்டு - என்
இறுதிப் பயணம்,
நால்வர் தோள்களிலோ
நாலுசக்கர வாகனத்திலோ
இனிதாய் முடியும்!!

Tuesday, December 20, 2011

இப்படி ஒரு பெண்

உன் புறழகு வேண்டாமடி - அது
காலத்தில் மாய்ந்து போகுமடி
உன் அகழகு வேண்டுமடி - அதுவே
ஆயுள் வரை நீடிக்குமடி


உன் கார்கூந்தல் நீளமென்னை -என்ன செய்யும்
களைத்து நான்வரும் போது - அழைத்து
அரவணைக்கும் அன்பு உள்ளம் - அல்லவா
என்னையுருக வைக்கும்

பள்ளி படிப்பறிவு கொஞ்சம் போதும்
ஆழகலங் கொண்ட அனுபவறிவு
அதிகம் வேண்டும்

மதியற்று நான் நடந்தால் - உன்
மதிகொண்டு என்மதி வெல்லவேண்டும்

இறையடி நான்சேர நேர்ந்தால் - என்
இராஜ்ஜியமாள ராணியின் திறன்வேண்டும்

மாடகுளம் என்வழி தளைக்க
மங்கையொருத்தி வேண்டும்
மங்கை "நீ" ஒருத்தி மட்டுமே வேண்டும்............