ஹையோ வினொத்து, உனக்கு வயசாய்ப் போச்சே!!
பரவாயில்லை,
வயசுக்கு வயசாகட்டும், சிந்தனையும் செயலும் வாலிப பருவத்திலேயே இருக்கட்டும்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
வங்க கடல் ஓரத்திலே (மேரினா ஃபீச்) வந்து கூடி, ஒன்று சேர எங்களுக்குச் சம்மதம்,
வைத்திருக்கும் சன்ட்ரோவிலே, மீன்கொதி பறவையை அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை வாங்கி வர உனக்கு சம்மதமா???
நண்பனின் பதில்
முதலில் இங்கே வா...
மீன்கொதி பறவையை அடுக்கி வைத்திருக்கும் பெட்டியை வாங்கி வர எனக்கு சம்மதமே !!!!
Saturday, October 4, 2008
புரிந்து போன புதிர், மீண்டும், புரியாமல் போகுதடி!
நீ, உன் முகம் காட்ட, வான் நிலவு தன் முகம் மறைத்த தடி;
நீ, மௌனம் கலைக்க, வானுலாவும் பறவை இனம், மௌனம் ஆனதடி;
ஒலி ஒளி உலகத்தை விட்டு போனதடி.
நான், புரியாமல் தவிக்கிறேன் ;
நீ, புன்னகையில் மிதக்கிறாய்!
பூங்-காற்று என் காதில்,
"நிலவின் களங்கம், இவள் முகத்தில் இல்லை
பறவையின் மொழிப் பிழை, இவள் மொழியில் இல்லை"
என்று சொல்லி போனதடி;
புரியாத புதிரை பூங்காற்று புரியவைத்ததடி.
உலகத்தை காக்க, உன்னை கைதியாக்கி,
என் உள்ளம் என்னும் சிறையில் அடைத்து வைத்தேன்;
மீண்டும்,
நிலவு வானுலாவ வந்தது,
பறவை இனம், பாடத் துவங்கியது;
ஒலி ஒளி உலகத்தை வந்தடைந்தது.
நான்,
"நீ, சினங்கொள்ளாமல் இருக்க;
சிறையெடுத்த காரணத்தை எடுத்துரைக்க" வந்தேன்,
நீ,
புதியதொரு கோணத்தில் புன்னகைத்து நிற்கிறாய் !!
இந்த சிறை உனக்கு பிடித்துப் போனதோ - இதுவினா
விடை தேடமுயல்ந்தேன், பிறகறிந்தேன்
பூவையரின் புன்னகைக் கோரகராதி;
இந்த பூவுலகில் இல்லையடி,
இதுவரை, பூங்காற்று பதில் ஏதும் சொல்லவில்லையடி;
புரிந்து போன புதிறொன்று, மீண்டும், புரியாமல் போனதடி!!
நீ, மௌனம் கலைக்க, வானுலாவும் பறவை இனம், மௌனம் ஆனதடி;
ஒலி ஒளி உலகத்தை விட்டு போனதடி.
நான், புரியாமல் தவிக்கிறேன் ;
நீ, புன்னகையில் மிதக்கிறாய்!
பூங்-காற்று என் காதில்,
"நிலவின் களங்கம், இவள் முகத்தில் இல்லை
பறவையின் மொழிப் பிழை, இவள் மொழியில் இல்லை"
என்று சொல்லி போனதடி;
புரியாத புதிரை பூங்காற்று புரியவைத்ததடி.
உலகத்தை காக்க, உன்னை கைதியாக்கி,
என் உள்ளம் என்னும் சிறையில் அடைத்து வைத்தேன்;
மீண்டும்,
நிலவு வானுலாவ வந்தது,
பறவை இனம், பாடத் துவங்கியது;
ஒலி ஒளி உலகத்தை வந்தடைந்தது.
நான்,
"நீ, சினங்கொள்ளாமல் இருக்க;
சிறையெடுத்த காரணத்தை எடுத்துரைக்க" வந்தேன்,
நீ,
புதியதொரு கோணத்தில் புன்னகைத்து நிற்கிறாய் !!
இந்த சிறை உனக்கு பிடித்துப் போனதோ - இதுவினா
விடை தேடமுயல்ந்தேன், பிறகறிந்தேன்
பூவையரின் புன்னகைக் கோரகராதி;
இந்த பூவுலகில் இல்லையடி,
இதுவரை, பூங்காற்று பதில் ஏதும் சொல்லவில்லையடி;
புரிந்து போன புதிறொன்று, மீண்டும், புரியாமல் போனதடி!!
Subscribe to:
Posts (Atom)