Friday, September 19, 2008

என்னுள் வந்து விழுந்தவை

சாதித்து விட்டு சாகப் பிறந்தவன் நான்,
சாதிக்கும் முன் சாகப் பிறக்கவில்லை;

சரித்திரத்தின் ஏடுகள் என் முகவரிக்காக காத்துக் கிடக்கின்றன,
தன்னம்பிக்கை எனக்கு உறுதுணையக இருக்கும்,
தளராத முயற்சி என்னை வழி நடத்தி செல்லும்,
சற்றும் சலனமில்லாமால் என் வழியில் நான்....

மீண்டும் எழுந்து நடப்பேன், 

நடந்து கொண்டே இருப்பேன்
லட்சியத்தை தாண்டி பலநுறு 
அடிகள் நடந்த பின்
ஓய்வு எடுக்கலாமா? என யோசிப்பேன்!

வாழ்கையின் ரகசியம்

வாழ்கையின் ரகசியம் வானத்தில் எழுதியிருந்தால்,
வாசித்து வாழ்ந்திருபேன்,
வானத்தில் எழுதவில்லை!

ஒரு நாள்,
கார்மேகம் கண்ணை கசக்க,

வானவில் வந்து போக,
என் வீட்டின் முன் சிறிதொரு குளம் ஒன்று தோன்ற,

மழை துளிகள், மழை நீரில்;
நீராடி மகிழ்வதை நான் ரசித்துக் கொண்டிருக்க,

என் பார்வையின் எல்லையில்,
பருவமங்கை "நீ" வந்து நிற்கிறாய்!

நீ வந்ததேனோ வந்ததேனோ,
வினாவும் வியப்புமென்னை சூழ...


அர்த்தம் புரிந்ததடி, விசயம் விளங்கியதடி,
வாழ்க்கையின் ரகசியத்தை உன்னுள் புதைத்து,
காமன் வடிவமைக்க,
பிரம்மன் உயிர் கொடுக்க,
வர்ணண் உன்னை, என்னிடம் வழியனுப்பி வைத்தான் என்று!!