Thursday, July 21, 2022

குரல் எழுப்பினால் என்ன குற்றமா?


குரல் எழுப்பினால் என்ன குற்றமா?

அதற்கு கோவமா?

இது நியாயமா?

மழலை மொழி கண்டு
மந்திரத் தமிழ் கொண்டு
குழந்தைகள் குரல் எழுப்பும் - போது
பெற்றோர்!

பேணிக்காப்போர்!

உலகில் எங்கேனும் புகார் அளித்த துண்டோ?


(மழலை மொழி - பிழை கொண்ட மொழி)


Sunday, January 4, 2015

திகழினி

​​ஐய வருடம், ஐப்பசி 8 ​அதிகாலை,
என்தூக்கம் களைய எதிரே நின்றாள்.

மாமா,
இன்பந் தருதுன்ப இன்னல்
தெடங்கிற் றென்ராள்!!


என்னுள் ளெழுந்த பூகம்பம்
என்னை​ ​​அ​சைக்க வில்லை
உதட்டை அசைத்தது "குளித்து வா போலா மென்றது"

90 கிலோ மீட்டர் தூரமில்லை,
தரை தொடங்கி மூன்றாம்
தளமே தூரமானது.

​​(சூழ்)நிலை விளக்கிய மருத்துவர்
என் நிலை குலைத்தார்
என்னுள் பூகம்பம்
புத்துயிர் பெற்றது
என்னை அசைத்தது..!
என்னைம் புலனடகியது
என்னிலை உலகறிய வைத்தது.

வெள்ளை உடையனிந்த தமிழ(செவிலி)ச்சி
வேகமாய் எடுத்துரைத்தாள் (நிபந்தனைகளை)
பாவம்,
என்னைம் புலனும் அடங்கிய
விவரம் அவளறிய வில்லை போழும்?
நான்,
​தாளில்​ கிருக்கி முடிக்க
எடுத்து விரைந்தாள்.

​என் எண்ணம் போல் நடந்தவலே,
​​அந்த அன்னம் போல் பறந்தவலே,
​உருண்டோடும் வண்டியிலே
ஓசையின்றி கிடந்தவலே,
உருண்டோடிய வண்டி (அறுவை சிகிச்சை)அறையினுள் மறைய
என்னுள்ளம் பட்டபாடு உலகறியுமோ?

​(அறுவை சிகிச்சை​ அறை முன்)​​
ஆயிரம்பேர் சூழ்திருக்க அனாதைபோல் அமர்ந்தேன்,
அறையின் கதவு இமை​த்தே இயங்கியது​,
என்​விழி​ மட்டும் இமைக்​காமல்​ இயங்கியது.

அங்கு,
அந்த உடைபூண்டதனால்
அவன் காவலாளி - நா​னே
உண்மையான காவலாளி.

ஆறடிமனிதர் அஷ்வத்தா மவர் (குழந்தை மருத்துவர்)
சுருக்கி முடித்தார் -நான்
விரித்துள் வாங்கி வெளிபடுமுன்
காற்றில் கரைந்தார் -அவரை
கடமை அழைத்தது போழும்!

ஒய்யார நடைய பயின்ற செவிலிச்சி
என்னை ஓட வைத்தாள்.
ஆழ்துறக திலிருக்கும்
என்மகளை ஏந்திநின்றாள்.


மீண்டும் ஒரு முறை,
என் இமையின் ஓரம்ஈரம்​ - காரணம்,
வந்த​ ஆ​னந்தத்தை வாங்கிவைக்க 
மனதின் கொள்ளளவு போதவில்லை.

பரிசோதனை உண்டென்று பாசாங்குறைத்தாள் - தன்
ஒய்யார நடை தொடர்ந்தாள்,
அது கல் மண்ணாகும் வேகம்
எனக்கோ அது ஒளியின் ஓட்டம்.

ஆயிரம்பேர் சூழ்திருக்கும் அரண்மனை
என்று உணர்ந்தேன்,
ஓர் அரசன்போல் அமர்ந்தேன்!

எனக்காக பூத்தவள் இங்கிருக்க (மனைவி)
என்னால் பூத்தவள் அங்கிருக்க (மகள்)
என்னுடன் பூத்தவள் காத்துநிற்க (தங்கை)
இன்பமா துன்பமா தேரியவில்லை
அத்தருணம் துய்தேன்!

ரேனுகாதேவி...(மகப்பேரு மருத்துவர்)
அவரை பெற்றவர் சுவாசிக்க தத்தலிக்க..
எனக்கான சுவாசத்தை நின்றுகாத்தவர்..
அவர்,
நீடுடிவாழ என்றும் இறைவனிடம் முறையிடுவேன்.

தாய் நலமென்றார்
மகிழ்ந்தேன்!

சேய்யழுதள் என்றார்
அழுகையை நிறுத்த யாருமுற்ப வில்லையா?
மூடர் அனைவரும் வேடிக்கை பார்த்தனரா? என
பாசம் கொண்டதினால் கோவங்கொண்டேன்.
அறிவிய லறிந்தனால் அமைதியானேன்.

நிர்மலா வர மூன்றுமணி நேரம் ஆகும்.
அறைக்கு செல்லுங்கள் என்றார்..
அவரும் தாயல்லவா,
என் புறங்கொண்டகம் அறிந்தார் போழும்!

(எங்கள் அறையில்)
அவள் பெற்றவள் கீழிருக்க - நான்
பெற்றவளை உயர ஏந்திநின்றாள்
தாலாடியே உறங்கவைத்தாள்
தங்கையின் அருமை கொண்டவனே அறிவான்!!

உயிரற்ற வண்டியிலே,
உயிர்பெற்று வந்தாள்,
மகளை ஒப்பிட்டு வினாவினாள்
யாரை போல் உள்ளாள்,
எனைப் போலா? உங்களை போலா?
இந்த நிறம் தங்குமா தங்காதா?

நான்,
விடை காணமுற்பட வில்லை
என் மகள்,
விளகத்திற் குறியவளாக இருக்க
ஆசை கொண்டேன்!

ஆதாலால்,
திகழினி என்றே பெயர் சூட்டினேன்....!!

திகழினி...,
நீ திகழ் இனி..!!




Saturday, September 6, 2014

நாங்கள் மகிழ்ந்து மனமுறுக

நாங்கள் மகிழ்ந்து மனமுறுக,
மகிழ்ந்தே களைத் துறங்க  -நீ
உயிர் பெற ஆயத்தமாகிறாய்!

நீ,
இதயங் கொண்டு இசைமீட்ட,
மனிதறிவு கொண்டான கருவியில்
எலக்ட்ரான் இசைந் தாடா...
இனியதொரு நடனம் கண்டேன் - நான்
என்னுள் எழுந்த இசையில்
என்னை மறந்தேன்.
உன்னை சந்தித்த ஒலியலை
என்னை சந்தித்து நலமுரைக்க
நான் மனதில் கொண்டேன் - பூமியின்
சுழற்சியை கணக்கில் கொண்டேன்.


நீ,
என்குலம் காக்கும் வாரிசா?
என்குலம் போற்றும் வாரிசா?

என்னை,
என்னெல்லையில் நின்று காப்பவனா?
எட்ட நின்று காப்பவளா?

நீ,
என் மகனா? மகளா?

அறிவற்ற ஒலியலை இந்த
விவரமேதும் சொல்ல வில்லை

சீனத்து நாட்காட்டி மகன் 
என்று சொல்லியென்ன பயன்
ஆட்டுவிக்கும் ஒரு(இறை)வன்  இருக்க!

இதற்கு பதில் 
புரட்டாசியோ, ஐப்பசியோ
சொல்லும்.

Wednesday, December 4, 2013

மழை
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடியிடிக்கும் மேளங்கள்
இறங்கிவரும் தாளங்கள்
மின்னல் ஒரு நாட்டியம்
மேடை வான மண்டபம்

Thursday, January 26, 2012

நிலைமாறும் உலகிலே

நித்தம்,
நிலைமாறும் உலகிலே
நிலைகொள்ளப் பார்க்கிறேன்

நான்,
நிலைகொள்ள முற்படும்போது

என்னை,
வழக்குகள்சூழக் காண்கிறேன்
வாயடைத்துப் போகிறேன்
என் நிலைமாற்றாமல்
தன் நிலைமறக்காமல்
நிலைமாறும் உலகிலே

மீண்டும்,
நிலைகொள்ளவே பார்க்கிறேன்

Thursday, January 5, 2012

இன்றோடு

இன்றோடு மறைந்து பதினாங்கு ஆண்டாயிற்றே - நீங்கள்
ஆண்டகாலம் இன்னும் என்னில் மறையலையே

நானழுது புரண்ட மடியெங்கே - என்னை
அள்ளி அணைத்த நெஞ்செங்கே - நான்
நித்திரை கொள்ளபூண்ட தவக்கோல மெங்கே

மண்ணுள் புதையுண்டு மறைந்து போனதோ?
என்னுள் புதையுண்டு மறையாமல் நின்றதோ?

என்னை தோளில்சுமந்தந்த வழிபயணம் - என்
விழிப்பயணம் முடியும்போது முற்றுப்பெருமோ?
என்...........
விழிப்பயணம் முடியும்போதே முற்றுப்பெருமோ?

Thursday, December 22, 2011

சின்னஞ்சிறு வயதுமுதல்

சின்னஞ்சிறு வயதுமுதல் எனக்கு
கிடைத்த பொக்கிசமட அவள்;

வீடேன்னும் விளையாடரங்கில் வீரனாக நானிருப்பேன் - என்
தாயின் மடியில் பார்வையாளராக அவளிருப்பாள்

காலம் மெல்ல நடைபோட - அவள்
எழுந்து நடக்கும் காலம் வந்தது - கூடி
விளையாட கூட்டுகாரியானள்

அந்த சின்னஞ்ச் சிறுவயதில் ஆயிரத்திற்க்கும்
மேலான முரண்பாடுகள்; அதென்ன சண்டையா?
இல்லை,
கூடி விளையாண்டதில் எழுந்த குழப்பமா?
தீர்வுகாண அம்மா நீதிபதியாவாள் - வீடு
நீதிமன்றம் ஆகும்
தண்டனைக்கு பயந்துதிருவரும் தப்பி ஓடுவோம்
ஓட்டத்தின் களைப்பு மெல்லென்னை
நீங்கிச்செல்ல - நீதிமன்றம் வீடாகும்;
நீதிபதி அம்மா ஆவாள்
வெற்றி நடை போட்டு - வீடு
திரும்புவேன்; என்னுடன் அவளுமிருப்பால்

பருவகாலம் மாறிச்செல்ல - அவள்
பள்ளி செல்லும் காலமும் வந்தது
அவளின் பாதுகாவலன் ஆனேன்

கல்லுரிக்கு நான் செல்ல - அவள்
கனவுகளுடன் பயணித்தேன்

வாழ்க்கையின் அடுத்த பகுதி,
வேலைக்கு போக நேரம் ஆச்சே
விடைபெற்று நான் செல்ல - அவள்
தன் மனதின் அழுகையை
முகத்தில் மறைத்தாள்.

ஆகயத்தில் நான் பறக்க
வெற்றி படிகளில் நான்னேற
உலமார மகிழ்ந்தாள்;

காலம் ஓயவில்லை
நானல்லவா ஓய்ந்து விட்டேன்

பொன்னும் பொருளும் சேத்தாச்சு போதுமட சாமி - இனி
ஓய்வெடுக்க நேரமாச்சு;
பறந்து வந்தாச்சு பிறந்த மண்ணிற்கே - அங்கே
சரிந்து கிடக்கும் நாற்காலியில் சாய்ந்திருந்து - என்
சரித்திரத்தை என்னிப் பார்ப்பேன்
சரி எனத்தோன்றுமோ
தவறு எனத்தோன்றுமோ
தெரியவில்லை!

காலம் தன் பயணத்தை தொடர
அந்த சாயங்கால வேளையிலே..
சரித்திரத்தை என்னி பார்க்கையிலே..
சத்தமின்றி என் பயணம் முடியட்டும்!!

ஐயோ, மாரிலடித் தழுவாலே
தள்ளாத வயதில் என்தங்கை - அன்று
அவள் மனதின் அழுகை முகத்தில்
தெரியும்;
காற்றுடன் பயணி தவள் கண்ணீர்
என்னை வந்தடையும்; அது
நான் கொண்ட பாசத்தின்
நன்றி பரிசென்பேன்

அந்த பரிசைக் கொண்டு - என்
இறுதிப் பயணம்,
நால்வர் தோள்களிலோ
நாலுசக்கர வாகனத்திலோ
இனிதாய் முடியும்!!