Saturday, September 6, 2014

நாங்கள் மகிழ்ந்து மனமுறுக

நாங்கள் மகிழ்ந்து மனமுறுக,
மகிழ்ந்தே களைத் துறங்க  -நீ
உயிர் பெற ஆயத்தமாகிறாய்!

நீ,
இதயங் கொண்டு இசைமீட்ட,
மனிதறிவு கொண்டான கருவியில்
எலக்ட்ரான் இசைந் தாடா...
இனியதொரு நடனம் கண்டேன் - நான்
என்னுள் எழுந்த இசையில்
என்னை மறந்தேன்.
உன்னை சந்தித்த ஒலியலை
என்னை சந்தித்து நலமுரைக்க
நான் மனதில் கொண்டேன் - பூமியின்
சுழற்சியை கணக்கில் கொண்டேன்.


நீ,
என்குலம் காக்கும் வாரிசா?
என்குலம் போற்றும் வாரிசா?

என்னை,
என்னெல்லையில் நின்று காப்பவனா?
எட்ட நின்று காப்பவளா?

நீ,
என் மகனா? மகளா?

அறிவற்ற ஒலியலை இந்த
விவரமேதும் சொல்ல வில்லை

சீனத்து நாட்காட்டி மகன் 
என்று சொல்லியென்ன பயன்
ஆட்டுவிக்கும் ஒரு(இறை)வன்  இருக்க!

இதற்கு பதில் 
புரட்டாசியோ, ஐப்பசியோ
சொல்லும்.